‘வீரமே வாகை சூடும்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்த விஷால் இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து ‘ராணா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இது விஷால் நடிப்பில் உருவாகும் 32-வது படமாகும்.

இதனை அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கவுள்ளார். முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடித்து வருகிறார்.

இந்த நிறுவனம்தான் விஷால் தொகுத்து வழங்கிய ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]