காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தற்கொலை படைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது தலிபான் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 9 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. வேறு தீவிரவாதிகள் இருக்கின்றனரா என்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.