சென்னை: இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு  இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவரை மாணவர்கள் கடந்த ஆண்டின் பஸ் பாஸையே உபயோகித்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜுன் 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்ப தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அத்துடன் பள்ளிக்கும் செல்லும் மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பாசையே, புதிய பாஸ் வழங்கும்வரை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக  சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்  விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  2024 ஜுன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள்-அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகத்தால் 2023-24ல் வழங்கப்பட்ட பயண அட்டை- பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படததுடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

ஜுன் 10, 2024 அன்று பள்ளிகள்/ அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, 2024-25 கல்வியாண்டில் மாணவர்/ மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவினை கருத்தில் கொண்டு மா.போ,கழக பேருந்துகளில் மா.போ.கழகத்தால் 2023-24ல் வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ள மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து

தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2023-24 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி கல்விதுறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயக்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி/ மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து மா.போ.கழக நடத்துநர்/ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.