சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில்,  உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பங்கேற்க உள்ளனர்.

சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ் ட்ரைப் சார்​பில்,  சென்னை தரமணி​யில் உள்ள ஐஐடி ஆராய்ச்​சிப் பூங்​கா​வில் உலக தொழில்முனைவோர் விழா இன்று  பிரம்​மாண்​டமாக நடைபெற உள்ளது. இதில் சிறந்த தொழில்முனைவேர்கள் நிபுணர்கள் கொண்டாடப்பட உள்ளனர்.

இதையடுத்து,  இந்த விழாவிவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான   தொழில்​முனை​வோர், புத்​தொழில் நிறு​வனத்​தினர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.  பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், புதுமை கண்டு​பிடிப்​பாளர்​கள், புத்​தொழில் நிறு​வனத்​தினர் (ஸ்டார்ட்​-அப்) பங்கேற்​கிற்க உள்ள விழா குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இந்த  விழா​வில், 100-க்​கும் மேற்​பட்ட நிபுணர்கள் உரையாற்ற இருப்பதாகவும்,  கலந்​துரை​யாடல், மாநாடு, கருத்​தரங்​கம், பயிலரங்​கம், கண்காட்சி, சிறந்த தொழில்​முனை​வோருக்கு விருது வழங்​குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்​பெறுகின்றன.  மேலும்  திறன் மேம்​பாடு தொடர்பான அமர்​வுகள் இடம்​பெறும். தொழில்​முனை​வில் சிறந்து ​விளங்​கு​வோருக்கு பல்​வேறு பிரிவு​களில் 25 ​விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.

அத்துடன் தொழிழ்முறைவோர் தொடர்பான  கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியும் நடைபெறுகிறது.   தொழில்​துறை​யின் புதிய கண்டு​பிடிப்புகளை காட்​சிப்​படுத்​தும் வகையில் 100-க்​கும் மேற்​பட்ட அரங்​குகள் கொண்ட கண்காட்​சி​யும் நடைபெறுகிறது.