சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சென்னை ஃப்ரீலேன்ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்கர்ஸ் ட்ரைப் சார்பில், சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் உலக தொழில்முனைவோர் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறந்த தொழில்முனைவேர்கள் நிபுணர்கள் கொண்டாடப்பட உள்ளனர்.
இதையடுத்து, இந்த விழாவிவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனத்தினர், நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனத்தினர் (ஸ்டார்ட்-அப்) பங்கேற்கிற்க உள்ள விழா குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இந்த விழாவில், 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உரையாற்ற இருப்பதாகவும், கலந்துரையாடல், மாநாடு, கருத்தரங்கம், பயிலரங்கம், கண்காட்சி, சிறந்த தொழில்முனைவோருக்கு விருது வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மேலும் திறன் மேம்பாடு தொடர்பான அமர்வுகள் இடம்பெறும். தொழில்முனைவில் சிறந்து விளங்குவோருக்கு பல்வேறு பிரிவுகளில் 25 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அத்துடன் தொழிழ்முறைவோர் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியும் நடைபெறுகிறது. தொழில்துறையின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடைபெறுகிறது.