சென்னை:  வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன. தமிழக முதல்வர் எப்போதும் போல மத்தியஅரசுக்கு கடிதம் எழுதுவதும்,  பின்னர், மத்தியஅரசும் நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை நான்கு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட மீனவர்கள்  காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக் கடற்படை அத்துமீறல் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக மீனவ கிராம மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.  இந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்லும் போக்கு தொடர் கதையாகி வருகிறது. அதில் இன்றைய தினமும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.