கொழும்பு

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இலக்கையில்  கொரோனாவுக்கு பின்னர் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து. நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சீனாவிடம் கடன் வாங்கியது.. பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது.

இலங்கை அரசு விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்தது.  இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்து  வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்தது.

எனவே இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடித்தது.  இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டின் 4ம் காலாண்டு முதல் (அக்டோபர் 1 – டிசம்பர் 1) வீழ்ச்சி குறியீட்டுடன் ( – மைனஸ்) இருந்தது. குறிப்பாக, 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் பொருளாதார குறியீடு -8 என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இலங்கையின் அந்த சூழ்நிலையில் நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட் அதிபர் மகிந்தா ராஜபக்சே நாட்டை விட்டுத் தப்பியோடினார்., ராஜபக்சே அரசு கவிழ்ந்தது. கடந்த  2022 ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ரணில் தலைமையிலான இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது மெல்ல மீண்டு வருகிறது., நடப்பு ஆண்டின் 3ம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான புள்ளி விவரத்தை இலங்கை அரசு இன்று வெளியிட்டது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவிகிதமாக (+ பிளஸ்) அதிகரித்துள்ளதாக அதில் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின் முதல் முறையாக இலங்கையின் பொருளாதார குறியீடு வளர்ச்சி (+ பிளஸ்) என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது.