வியட்நாம்:
வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இணைய வழி மாநாட்டில் பங்கேற்ற வியட்நாம் சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.