சென்னை

தெற்கு ரயில்வே ரம்ஜான் பண்டிகைக்காக சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

தெற்கு ரயில்வே,

”ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இரண்டு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 06027) மார்ச் 30, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11.20 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணியளவில் போத்தனூர் சென்றடையும்.

போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் (எண்: 06028) சிறப்பு ரயில் மார்ச் 31, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 20.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்குத் தொடங்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம்”

என்று தெரிவித்துள்ளது.