தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது.

எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , திரையுலகினர் மற்றும் அவர் ரசிங்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பி.-ன் கடைசி பாடலின் போது இளையராஜாவுக்கு கேளடி கண்மணி பாடலை ஹம் செய்து காட்டியதை பதிவு செய்து அப்லோட் செய்துள்ளார் .

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் தமிழரசன் படத்தில் இடம்பெற்ற ‘நீ தான் என் கனவு’ என்ற பாடல். விஜய் ஆண்டனி நடித்த படத்தின் இந்த பாடல் 2019 டிசம்பர் மாதம் வெளியானது.

[youtube-feed feed=1]