பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் என்ற அச்சத்தின் விளைவாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளத. ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28,403 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300,988 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ல்லேய்டா, செக்ரையாவில் அடங்கிய 7 நகராட்சிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது அலை உருவாகி வேகமாக பரவக் கூடிய அபாயம் எழுந்துள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் 2வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.