சென்னை
தெற்கு ரயில்வே 3 வாராந்திர சிறப்பு ரயில் கால அளவை நீட்டித்துள்ளது/
தெற்கு ரெயில்வே இன்று,
”நாகர்கோவில் – தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை கூடுதலாக 4 வாரம் இயக்கப்படும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாரந்தோறும் திங்கட்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06011) மே 12-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு இடையே வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06035) மே 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06036) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
மேலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06030) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06029) மே 12-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை மேலும் 4 வாரம் நீட்டிக்கப்படுகிறது.”
என அறிசித்துள்ளது.