சென்னை

ன்று முதல் மார்ச் 9 வரை தென்மாவட்ட ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரெயில் மார்ச் 06, 07ம் தேதிகளில் தாம்பரத்தில் நிறுத்தம்,

மன்னார்குடி – சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரெயில் மார்ச் 8ம் தேதி தாம்பரத்தில் நிறுத்தம்.

நெல்லை – சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ம் தேதி செங்கல்பட்டில் நிறுத்தம்.

தூத்துக்குடி சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ம் தேதி மாம்பலத்தில் நிறுத்தம்

மண்டபம் – சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரெயில் மார்ச் 8ம் தேதி தாம்பரத்தில் நிறுத்தம்,

புதுச்சேரி – சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்,

சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரெயில் மார்ச் 06, 07ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரெயில் மார்ச் 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரெயில் மார்ச் 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் மார்ச் 6, 7ம் தேதிகளில் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.