கட்டாக்:
ந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையேயான 3-வது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.