சென்னை

விரைவில் வார்டு வாரியாக சென்னை நகரில் சிறப்பு குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ள்து.

நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தபோது, 72-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரவணன் ஒரு கோரிக்கை விடுத்தார்.

சரவணன்,

“என்னுடைய வார்டில் மட்டும் 100 சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு சிரமம் உள்ளது. எனவே, சிறப்பு குழந்தைகளுக்கான வகுப்பறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்”

என்று கேட்டுக்கொண்டார்.

மேயர் பிரியா,

“விரைவில் சிறப்பு குழந்தைகள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுக்கப்படும். அதன் பிறகு, அவர்களுக்கான சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்”

என்று பதில் அளித்தார்.