நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்ற நிலையில், இத்தொடரில் வேறுசில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.

* இத்தொடரில் ஒரு அணியாக இந்தியா சாதித்துள்ளது. ஆம், சர்வதேச டி-20 அரங்கில், இதுவரை எந்த ஒரு அணியும், டி-20 தொடரை மொத்தமாக 5-0 என்ற கைப்பற்றியதில்லை. இந்திய அணி முதன்முதலாக அந்தச் சாதனையை செய்துள்ளது.

* இந்தியாவின் டெத் பவுலர் மற்றும் வேகப்பந்து துருப்புச்சீட்டு என்று அழைக்கப்படும் பும்ரா, இத்தொடரில் ஒரு சாதனையை செய்துள்ளார்.

சர்வதேச டி-20 தொடரில், அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர் என்ற பெருமையைப் படைத்துள்ளார். ஐந்தாவது டி-20 போட்டியில் ஒரு மெயிடன் ஓவரை வீசியதன் மூலம், மொத்தமாக 7 மெயிடன் ஓவர்களை அவர் வீசியுள்ளார். இதன்மூலம், இலங்கையின் நுவன் குலசேகராவின் 6 மெயிடன் ஓவர்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

* இந்த டி-20 தொடரின் 5வது போட்டியில், இந்தியாவின் ஹிட்மேன் ரோகித் ஷர்மா 31 ரன்களை எட்டியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த எட்டாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டினார்.