சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை  (ஜனவரி 25) வரை சுமார் 15லட்சம் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்ட பிறகு,  2025 டிசம்பர்  19-ந்தேதி  வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.  இறுதியாக  வாக்காளராக சேர்வதற்கு வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடம் மாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6-ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனவரி 25ந்தேதி  வரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று, 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]