நெட்டிசன்:

ரபீக் சுலைமான் அவர்களது முகநூல் பதிவு

சென்ற ஆண்டு திட்டமிட்ட ‘பட்ஜெட்’ல் எல்லா செலவும்போக, பத்து பில்லியன் அதிகப்படியாக கையிருப்பு இருக்கிறதாம். என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த அரசு, இது மக்கள் பணம். அதை மக்களிடமே கொடுத்துவிடுவோம் என்று முடிவெடுத்திருக்கிறது.

ம்ம்ம் …. சிங்கப்பூர் அரசு!

21 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு அந்த பத்து பில்லியன் டாலர் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார் அந்நாட்டின் நிதியமைச்சர்!