விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது கைது செய்யப் பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
“திவ்யா கள்ளச்சி“ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் திவ்யா. இவர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். இவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்த இரண்டு சிறுவர்களிடம் சீண்டலில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குழந்தை நல அலுவலர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் திவ்யா கள்ளச்சி உள்பட 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கார்த்திக் ஐ லவ் யூ. கார்த்திக் மாமா.. என கார்த்திக்கை தேடி அலைந்து பிரபலமானவர் தான் திவ்யா கள்ளச்சி. இவர் “திவ்யா கள்ளச்சி“ என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். கார்த்திக், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி வீடியோவில் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.
இவர் தமிழ் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியிலும் பேசி வந்தார். இவது வீடியோக்கள் பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்ததை பாசிட்டிவ்வாகக் கொண்டு, அடுத்தடுத்து வீடியோ போட்டு பிரபலாகி அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் குழந்தை நல அலுவலர் மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா கள்ளச்சி தனது மூன்று நண்பர்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாகவும், அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலிசார் நால்வரயும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,. சென்னையைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்தான் திவ்யா கள்ளச்சி என்ற யூடியூப் சேனல் நடத்தும் பெண் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றதாகவும், விசாரணையில் காவல் ஆணையரகத்தில் புகாரளித்த சித்ரா என்ற பெண்ணே தனது நண்பரின் மூலம் பெண் யூடியூபரை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லியது தெரியவந்தது.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் புகாரளித்த பெண் மற்றும் பெண் யூடியூபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.