சென்னை

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல்   தொல்லை நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு 22 வயது இளம்பெண் சென்னை திருவொற்றியூவசித்து வருகிறார்.  அந்தப் ப்ண், வேலை முடிந்து கடற்கரையில் இருந்து மின்சார ரெயிலில் திருவொற்றியூர் வந்தார்.

பிரகு அவர் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், வாலிபரை தாக்கியதுடன், கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட் டு சக பயணிகள ஓடிவந்ததால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்