கொழும்பு:

ஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,  இலங்கை அரசில் உள்ள 2 கவர்னர்கள் 9 அமைச்சர்கள் பதவி விலகினர்.

இந்த நிலையில் பதவி விலகிய இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள், முன்னாள் இலங்கை அதிபரும், இலங்கை எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில்  350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது மாபெரும் தொடர் குண்டுவெடிப்பில் இலங்கையில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர் களின் கடை வீடுகளை சிங்களர்கள் தாக்கி வந்தனர். மேலும்,  இலங்கையில் வாழும் புத்த பிட்சுகள் உள்பட சிங்களர்கள்  நாட்டின் அரசியல் பங்களிப்பில் இஸ்லாமியர்களில் இருக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் இருந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள்.  இதேபோல் ஆசாத் அலி, ஹிஸ்புல்லா ஆகிய இரண்டு ஆளுநர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா செய்துள்ள இஸ்லாமிய அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.