சென்னை

மைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

கடந்த 3 ஆம் தேதி அன்று கரூரில் கடந்த 3-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், மேலும் 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.