சென்னை

ன்று நடந்த அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.

இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்ஷக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

[youtube-feed feed=1]