சென்னை

ரும் மார்ச் 5 ஆம் தேதி தொகுதி சீரமைப்பு குறித்து நடக்கும் அனைத்துக் கட்சி  கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக் முதல்வர் மு  க  ஸ்டாலின் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பும். மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 எம்.பி. தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் கூறி இருந்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதோடு தமிழகத்தின் குரல் நசுக்கப்படுவதாக அமைந்துவிடும் இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க தேர்தல் கமிஷனில் பதிவு பெற்றுள்ள 45 கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை வருகிற மார்ச் 5 -ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் கூட்டி உள்ளதாக முதல்வர் கூறி இருந்தார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,

“பல போராட்டங்களை தனித்து தான் செய்து இருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுது தான் பேசுகிறார்கள். தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே நான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். இந்த விவகாரத்தில் தனித்துதான் போராடுவோம்.

கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம். அதனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்”

என்று அறிவித்துள்ளார்.