டெல்லி

ச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம்தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது

xr:d:DAFmQLwY5mE:3,j:5579227942362287297,t:23061908

அமலாக்கத்துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீ்ன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மற்றொரு வழக்கு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வருவதால், விசாரணையை கோடை விடுமுறையின் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என வாதிட்டார்.

செந்தில்பாலாஜி சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞ சி.ஏ.சுந்தரம்,  ‘மனுதாரர் 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘300 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனுதாரருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்கும்படி இல்லை. 2½ ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் உள்ளன’ என குறிப்பிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. எனவே இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமறம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜியின் தரப்பில் வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி உள்ளனர்.