டெல்லி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
.
தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருந்தது தெரியவந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை நீதிபதிகள் உறுதி செய்கின்றனர்.