டெல்லி

ச்சநீதிமன்றம் ஆள்நர்களுக்கு குற்றவியல் விசாரணையில் இருந்து விலக்களிக்கும் சட்டத்தை ஆய்வ் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கொல்கத்தா போலீசாரிடம் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆளுநர் ஆனந்த போஸ், மறுப்பு தெரிவித்துள்ள்ளார்

அவர் புகாரில் கூறப்பட்டுள்ள நாளான மே 2-ஆம் தேதி அன்று மாலை 5.32 மணி முதல் 6.41 மணி வரை கவர்னர் மாளிகையின் வடக்கு வாசலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் சிலரிடம் ஆளுநர் மாளிகையில் திரையிட்டுக் காட்டினார்.

மேற்கு வங்க முதல்வர் இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்ல தங்களுக்கு பயமாக உள்ளது என சில பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கடந்த ஜூன் 28 ஆம் தேதி இதனை கண்டித்து மம்தா பானர்ஜி மீது ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் தரப்பில் குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361-ஐ ஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்போது நீதிபதிகள், குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை ஆய்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேற்கு வங்க அரசு  இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பையும் இணைக்க மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.