சென்னை
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் வசித்து வரும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டுகள் உள்ள் நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏணாஏஏ சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் அடைத்ததைத் தொடர்ந்து, ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆஆஈனும், தொடர்ச்சியாக யூடியூபில் சவுக்கு சங்கர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றி அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடு சூறையாடல் குறித்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரத்தில் பதிவான விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.