ரியாத்: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள செளதி அரேபியாவில், புதிதாக 1,172 கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 124 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய புதிய நோயாளிகள், தீவிர விசாரணை மற்றும் ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,102 என்பதாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மற்றும் அங்கே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.