
சென்னை
நடிகர் சரத்குமார் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம் எங்கும் அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சமத்துவ மக்கள் கட்சியும் வலியுறுத்தி வருகின்றது.
இந்த கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் ஆவார்.
இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவருடன் 200 க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel