மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் யோகிபாபு, அம்மு அபிராமி,புகழ் மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது AV33 திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படபிடிப்பில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் சமுத்திரகனி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.