பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார் சமந்தா. இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தற்போது சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்யப் போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாக சைதன்யா தன் அப்பாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். சமந்தா தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று சமந்தாவின் மாமனாரும் நடிகருமான நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து சொன்னால் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்பது வதந்திதான் என்று கருத்திட்டு வந்தார்கள் ரசிகர்கள். அவர்களின் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக சமந்தா நாகர்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ”உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் மாமா” என்று உற்சாகமுடன் வாழ்த்தியுள்ளார்.

விவாகரத்து பேச்சு ஒருபக்கம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கியிருப்பதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது.