சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று  மாலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946 ஆக  இருந்தது. அவர்களில்  288 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 655  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர்  மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்,  இன்று மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்ட்ட நிலையில்   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது.
[youtube-feed feed=1]