சபரிமலை
மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் (16ம் தேதி) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது.
மீண்டும் 3 நாட்களுக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்தனர். நேற்று முன்தினத்துடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.
நேற்றிரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்படாட்ஜ நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அய்யப்ப விக்கிரகத்தில் திருநீறு பூசி அய்யப்பனை தவக்கோலத்தில் இருத்தி கோவில் நடையை சாத்தினார்.