1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9 ம் தேதி மாஸ்கோ-வின் செஞ் சதுக்கத்தில் இந்த அணிவகுப்பு நடைபெறும்.

உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலை இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கிய ரஷ்ய படைகள் இன்னும் உக்ரைன் நகர வீதிகளை விட்டு வெளியேறவில்லை.

அதேவேளையில், ரஷ்ய ராணுவ விமானங்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களின் அணிவகுப்பு ஒத்திகைகள் கடந்த சில நாட்களாக மாஸ்கோ-வில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய அதிபர் புடினின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கை குறித்த பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், மே 9 ம் தேதி அணிவகுப்பு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.