ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், அனைத்தும் கைமீறி போய்விட்டதாக அந்நாடு அறிவித்து. இத்தாலிக்கு உதவும் பொருட்டு ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்பியுள்ளது.

இந் நிலையில், கோர்லாகோ நகரில் மருத்துவமனைகள், முதியோர் வசிக்கும் கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்ய ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா, கடினமான காலங்களில் உதவி செய்வதின் மதிப்பை உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.