நாகப்பட்டினம்

ரசியல் கட்சி தொடங்குபவர் எல்லாம் எம் ஜி ஆர் ஆகிவிட முடியாது என ஆர் எஸ் பாரதி கூறியுள்ளர்.

நாகப்பட்டினத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் விழா நடந்த்து.  இந்த விழாவில் திம்க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ஆர் எஸ் பாரதி தனது உரையில்,

”தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. ஒரு இரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.

இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க.; இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.”

என்று கூறியுள்ளார்.