சென்னை

ற்போது நாய் கூட பி ஏ பட்டம் பெறுவதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும்  முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். தமிழக சட்டசபையில்; உடானடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இன்றி, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.எஸ். பாரதி தனது உரையில்,

”எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்குத்தான் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வந்துள்ளது. சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் எங்களில் பலர் டாக்டர் ஆகினர். குலம் கோத்திர பெருமையால் டாக்டர் ஆகவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை.

எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நான் படித்தபோது பி.ஏ.படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்போது நாய் கூட பி.ஏ.பட்டம் வாங்குகிறது. எனக்கு  மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் உள்ளது

என்று கூறினார்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியது சர்ச்சையானதையடுத்து தாம் நாய் கூட பட்டம் பெறுகிறது என்பதை உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும், கல்வி அனைவருக்குமானதாகிவிட்டது என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.