திருப்பதி

திருப்பதி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோத்சவத்துக்கான ரூ.300  தரிசன டிக்கட் இன்று வெளியாகிறது.

கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்தது.

வரும் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோத்சவம் நடைபெற உள்ளது.

நவராத்திரி பிரம்மோத்சவ விழா பக்தர்களுடன் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதையொட்டி பிரம்மோத்சவ நாட்களுக்கான ரூ.300 தரிசன டிக்கட் இன்று காலை வெளியாகிறது.

இந்த டிக்கட்டுகள் இன்று காலை 11 மணிக்கு www.tirupathibalaji.ap.gov.in என்னும் இணைய தளத்தில் வெளியாக உள்ளது.

[youtube-feed feed=1]