சென்னை: ரூ.2.89 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதல்வர்  மு,க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு, மைதானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.89 கோடியில் கால்பந்து மைதானம்  சென்னை திரு.வி.க.நகர்  பல்லவன் சாலையில் உள்ள மைதானத்தில்  அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவுகள், வரைபடங்கள் ஏற்கனவே தயார்ன நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்பந்து மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.  அப்போது அதிகாரிகள், கால்பந்து மைதானம் தொடர்பான  கட்டமைப்பை வரைபடம்மூலம் விவரித்தனர். இந்த மைதானத்தில் செயற்கை புல் மூலம் கால்பந்து மைதானம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகர மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.