சென்னை:  தமிழ்நாடு அரசின் ரூ.1000 கோடி முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய 3 நாள் ரெய்டில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசின் ஊழலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக பல்வேறு போராட்டங்களை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில்,  தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மார்ச்6 முதல் 8ம் தேதி வரை நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” மாநில அரசின் அனுமதியின்றி பி.எம்.எல்.ஏ., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்,

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை