சென்னை: அமலாக்கத்துறை சோதனையை தொடர்நது டாஸ்மாஸ்க் நிறுவனத்தில ரூ.1000கோடி ஊழல் நடத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பொதுவாக ஆளும் கட்சியினர்மீதான வழக்குகளை வேறு மாநிலத்தில் விசாரிக்க கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்துவது வழக்கமானது. ஆனால், தமிழ்நாடு அரசு, தனது அரசு நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை முதலில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகளை மீறி அமலாக்கத்துறை விசாரணை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது பேசும்பொருளான மாறிய நிலையில், அடுத்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வும், வழக்கு விசாரித்து, தமிழ்நாடு அரசுமீது கடுமையாக சாடிய நிலையில், திடீரென அந்த நீதிபதிகளும் வழக்கு விசாரிப்பதில் இருந்து விலகி இருப்பது, நீதித்துறை மீதான தாக்குதல் என விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை ரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை 3 நாட்ள சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் 20ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, டாஸ்மாக் சோதனை வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல்கள், அமலாக்கத்துறை வழக்கின் தகவல் அறிக்கை மற்றும் சோதனையின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இதர ஆதாரங்களையும் தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று கூறிய உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், மதுபான நிறுவனங்கள் தொடர்பான பல நிதி மோசடிகளை கண்டறிந்து உள்ளோம். கணக்கில் வராத பணப்புழக் கம் மற்றும் சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டது ஆகியவை குறித்து கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நெருக்கடி தரக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடும்படியும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தனர். ஆனால், எதற்காக வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகின்றோம் என்பதற்கான காரணம் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதனைதொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது கடுமையாக சாடியது. ஊழல் வழக்கை விசாரிப்பதை எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பியது. இதனால் தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்த நீதிபதிகளும், விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “டாஸ்மாக் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனை வேறு ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்,”என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி தெரிவித்த அம்சங்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக கூறியது. மேலும் அப்போது விக்ரம் சவுத்ரி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, இந்த வழக்கு பட்டியலிடப்படும் என்று கூறினார்.
உயர் நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோருவதை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 139ஏ அனுமதிக்கிறது. இந்த பிரிவின் கீழ்தான் தமிழ்நாடு அரசு மனு செய்துள்ளது.