சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்,  இது மிகவும் அதிகமான தொகை என்று கூறியதுடன்,  இதுகுறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த கள்ளச்சாராயத்தை திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகஅவர் மற்றும் மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்,  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கூடுதல் நிவாரணங்களையும் தமிழக அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. விபத்து மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிக பட்சமாக தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கி வரும் நிலையில்,  திமிர் எடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிழப்பவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் வழங்குவது என்றும், இது மக்களி வரிப்பனம், அதை தாறுமாறாக செலவு செய்யவா அரசை தேர்ந்தெடுத்தோம் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியதை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 5) விசாரித்தது.

அப்போது, ‘கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!