டெல்லி: மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ், நாட்டின் பெண்களுக்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது பெண்களை கவரும் வகையில்   பல்வேறு உத்தரவாதங்களை  வெளியிட்டு உள்ளது.

அதன்படி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது.

● மகாலட்சுமி  என்ற திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பப் பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் காங்கிரஸ் அரசு வழங்கும்.

● அனைத்து அரசு வேலை காலியிடங்களிலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்

● ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் மதிய உணவு பணியாளர்களின் சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டும்.

● ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதிகார மைத்திரி நியமனம் செய்யப்படுவார்கள்,.

● சாவித்ரி பாய் ஃபுலே தங்கும் விடுதிகள்  என்ற பெயரில்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பெண்கள் விடுதி உருவாக்கப்பட்டு, தற்போதைய விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகாலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும்.
இரண்டாவதாக மகளிருக்கு 50 சதவிகித உரிமை என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டத்தில் புதிய ஆட்சேர்ப்புகளில் பாதிக்கு மேல் பெண்களுக்கு உரிமை இருக்கும்.
மூன்றாவதாக, உழைப்புக்கேற்ற ஊதியம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுப் பணியாளர்களின் மாத வருமானத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
நான்காவதாக, பெண்களுக்கான அதிகாரம் திட்டத்தின் கீழ் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு துணை ஆலோசகர் நியமிக்கப்படுவார்.
ஐந்தாவது, சாவித்ரிபாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்காக மாவட்ட தலைமையகத்தில் குறைந்தபட்சம் ஒரு விடுதியாவது கட்டப்படும். இந்த விடுதிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் இரட்டிப்பாக்கப்படும்” என காங்கிரஸ் அறிவித்துள்ளது.