‘தேவராட்டம்’ படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் ‘பேச்சி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.
இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.


இதனிடையே, ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார். முத்தையா. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்த ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ஆர்.கே.சுரேஷ்.

[youtube-feed feed=1]