விருதுநகர்

மிழக அமைச்சர் தங்கம் தென்னர்சு அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு சென்னம்பட்டி கால்வாயில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அறிவித்துள்ளார்.

விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதியில் சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆயினும் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.

தற்போது சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால் அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் “சென்னம்பட்டி அணைக்கட்டு – வலது கால்வாயை திறந்து வைத்தார். இந்த கால்வாயின் மூலம் 746.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று விவசாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழி வகுப்பதற்காக தொடங்கப்பட்டது.

சென்னம்பட்டி வலது கால்வாயில் சென்னம்பட்டியில் இருந்து மல்லாங்கிணறு வரை செல்லும் இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்று நீர்வரத்தினை ஆய்வு செய்தார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நந்திக்குண்டு பகுதிகளில் கால்வாயில் தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.