மும்பை

பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுக்கு அவரது முன்னாள் இணைவி தன்னை கொடுமைப்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி தர வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பல டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர். மத்திய அரசின் விருதுகளையும் பெற்றவர். ரியா பிள்ளை லண்டனில் பிறந்தவர்.  மாடல் உலகில் புகழ் பெற்றவர்.  இவர் முதலில் நடிகர் சஞ்சய் தத்தை 1996ல் மணம் புரிந்து 2008ல் அவரை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு மூன்று வருடம் அதாவது 2005 முதல் ரியாவுக்கு லியாண்டருடன் தொடர்பு இருந்துள்ளது.  இருவரும் ஒன்றாக வசித்தனர்.  இவர்களுக்கு ஆய்னா என்னும் பெயரில் ஒரு மகள் இருக்கிரார்.

பயஸும், அவர் தந்தையும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தன் மேல் குடும்ப வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் 2014ல் ரியா ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.  இது வெகுநாட்கள் முடிக்கப்படாததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கில் தனக்கு குடும்ப வன்முறை நிகழ்ந்ததால் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு தேவை என ரியா கேட்டிருந்தார்.  ஆனால் தற்போது ஒரு சைபர் சேர்க்க விட்டுப் போனதாகவும் அதனால் தான் கோரி இருந்தது ரூ. 1 கோடி எனவும் தற்போது கூறி உள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பயஸ் தனது தந்தையுடன் வந்திருந்தார்.  ரியா பிள்ளை தனது தாயாருக்கு உட்ல் நிலை சரியில்லாததால் தன்னால் வழக்கு விசாரணைக்கு வர முடியவில்லை என தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார்.  பயஸின் வழக்கறிஞர் இது ஒப்புக் கொள்ள முடியாது எனவும் உச்ச நீதி மன்றம் இன்னும் ஆறு மாதங்களுக்குள் வழக்கை முடித்தாக வேண்டும் என உத்தரவிட்டிருப்பதால் வழக்கை மேலும் மேலும் ஒத்தி வைக்கக் கூடாது என தெரிவித்தார்.