சென்னை: தமிழக காவல்துறையினர் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ந்தேதியுடன் ஒய்வுபெறும் நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு புதிதாக தீ ஆணை​யம் ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக நியமித்துள்ளது.

ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,    தனியாக  காவல்துறையில்  ஒரு ஆணையத்தை உருவாக்கி, அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த மாதம் 31ந்தேதியுடன் ஓய்வு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் வீட்டு வசதி கழக நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, சென்னையில்  ஆகஸ்டு 29ந்தேதி  நடைபெற்றது. இருவருக்கும் ஹோம் கார்டு டிஜிபி பிரமோத்குமார் நினைவுப் பரிசு வழங்கினார்.

தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் மறிறும் மற்​றொரு டிஜிபி​யான, தமிழ்​நாடு போலீஸ் ஹவுசிங் கார்​பரேசன் லிமிடெட் தலை​வ​ராக இருந்த சைலேஷ் குமார் யாத​வும் நாளை​யுடன் (ஆகஸ்டு 31) பணிஓய்வு பெறுகிறார். இதையொட்டி இரு​வருக்​கும் பணிநிறைவு பாராட்டு விழா மற்​றும் பிரிவு உபச்​சார விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.  இந்த விழாவில்,  இந்​நிகழ்ச்​சி​யில் டிஜிபிக்​கள், பிரமோத்​கு​மார், சீமா அகர்​வால், சந்​தீப்​ராய் ரத்​தோர், அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், வெங்​கட​ராமன், சட்​டம் ஒழுங்கு கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சென்னை காவல் ஆணை​யர் அருண் உள்பட பலர் கலந்து கொண்​டனர். மேலும்,   போலீஸ்  அதி​காரி​கள் மற்​றும் ஓய்​வு​பெற்ற போலீஸ் அதி​காரி​கள் உட்பட ஏராள​மானோர் இதில் பங்​கேற்று பாராட்டி பேசினர்.

இதையடுத்​து, இரு​வருக்​கும் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதை நடை​பெற்​றது. அதை ஏற்​றுக் கொண்​டபின் சங்​கர் ஜிவால் பேசும்​போது நன்றி தெரி​வித்​தார்.

ஓய்வுபெற்ற டிஜிபி சங்​கர் ஜிவால் உத்​தர​காண்ட் மாநிலம், அல்​மோரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர். பொறி​யியல் படிப்பை முடித்​திருந்த இவர் 1990 பேட்ச் ஐபிஎஸ் அதி​காரி ஆவார். மன்​னார்​குடி உதவி எஸ்​பி, சேலம், மதுரை மாவட்ட எஸ்​பி, திருச்சி காவல் ஆணை​யர், மத்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்​குநர், உளவுப்​பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்​படை கூடு​தல் டிஜிபி என போலீஸ் துறை​யில் பல்​வேறு பதவி​களை வகித்​தவர். அயல் பணி​யாக மத்​திய அரசிலும் 8 ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார்.

சென்​னை​யின் 108-வது காவல் ஆணை​ய​ராக 2 ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார். மெச்​சத்​தகுந்த பணிக்​காக 2 முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் பெற்​றவர். இந்​நிலை​யில் 2 ஆண்​டு​கள் டிஜிபி​யாக பதவி வகித்த சங்​கர் ஜிவால் நாளை​யுடன் பணிஓய்வு பெறுகிறார். இவர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரின் உதவியாளர் போல செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சங்கர் ஜிவாலை மேலும் சில ஆண்டுகள் பணியில் அமர வைத்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள தீயணைப்பு துறை சார்பில், தனியாக ஒரு ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது,   தீ மற்​றும் உயிர் மீட்பு பணி​களில் புதிய தொழில் நுட்ப நுணுக்​கங்​களை செயல்​படுத்​தும் நோக்​குடன் தீ ஆணை​யம் என்ற பெயரில் ஒரு புதிய துறையை தமிழக அரசு அமைத்​துள்​ளது.  அதற்கு தலை​வ​ராக சங்​கர் ஜிவாலை நியமித்து அரசு உத்​தரவு பிறப்பித்துள்ளது.

டிஜிபி சங்​கர் ஜிவால் பதவி காலம் வரும் 31-ம் தேதி​யுடன் நிறைவடை​யும் நிலை​யில் நிர்​வாக பிரிவு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமன், நாளை முதல் சட்​டம்-ஒழுங்கு பொறுப்​பை​யும் கூடு​தலாக கவனிக்க உள்​ள​தாக​வும் அதற்​கான அறி​விப்​பு வெளி​யாக உள்​ள​தாக​வும்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.