‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 3-வது பிரிவின் கீழ் உள்ள கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-வது அட்டவணையிலும் திருத்தம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை இன்று நிறைவேற்றி இருக்கிறது.