சென்னை: ரூ.734.91 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் நவீன மயமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், தற்போது,   எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒன்றாக திகழ்கிறது. 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது. மேலும் இந்தியர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.  தெற்கு ரயில்வேயில் 2வது பெரிய ரயில் நிலையமான எழும்பூர்   சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.   இங்கு ரயில் நிலையத்தில் நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். அருகே மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகளும் நடைபெற்று வருகின்றன.    தற்போது பயணிகள் கூட்டம் அதிகரிப்பு, அதற்கு ஏற்றார்போல ரயில் சேவைகளும் அதிகரித்து வருவதால், போதிய இடவசதி இன்றி மக்கள் நெருக்கத்தில் திண்டாடி வருகிறது.

இதையடுத்து எழும்பூர் ரயில்நிலையத்தை விரிவுபடுத்தவும், நவீன படுத்தவும் மத்திய அரசு திட்மிட்டுள்ளது.  அதனப்டி எழும்பூர் ர யில் நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மத்தியஅரசு ஏற்று, அதற்க  ₹734 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது முகப்பு இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. காந்தி இர்வின் சாலையில் உள்ள நுழைவாயில், உலக தரத்தில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தற்போது பிரதான நுழைவாயில் கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் நிலையத்தின்   பிரதான முகப்பு காந்தி இர்வின் சாலையிலும், பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடையும் வகையில் பிரமாண்டமாக அமைய உள்ளது.   அதக்டி,  1,35,406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டிடம் புதிதாக அமைய இருக்கிறது.  மேலும்,  எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிகவளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில் வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளப் பணி முடிவடைந்துள்ளது. தற்போது பிதான நுழைவாயில் கட்டிடம் இடிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

அத்துடன்,  பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன நிறுத்தங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

மேலும் தற்போதுள்ள ரயில்வே பார்சல் பகுதி ரயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளதுஎன்றும், ரயில் நிலையத்தில் கார்கள், வாடகை கார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் நிறுத்தும் வகையில் அடுக்கு பார்க்கிங் வசதிகள் அமைய உள்ளன. பயணிகள் தனித்தனி பகுதிகளில் இருந்து வந்து சேர 3 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ள என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்குதடையின்றி ரயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளி வளாகப்பகுதி அமைய இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், குடிநீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன.