சென்னை: மெரினாவில் அமைந்துள்ள கருணாதிநி நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 26ந்தேதி மீண்டும் திறந்து வைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018, ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.  மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான  கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்  நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ்  அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்படுள்ளது.. இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து வரும் 26ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.